வால்பாறை மஹா முனீஸ்வரன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்
வால்பாறை: வால்பாறை கக்கன்காலனி மஹாமுனீஸ்வரன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை நகர் கக்கன்காலனி மஹாமுனீஸ்வரன் திருக்கோவிலின், 26ம் ஆண்டு திருவிழா கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இரவு, 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவை, தி.மு.க.,நகர செயலாளர் சுதாகர், கவுன்சிலர் மகுடீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நாளை (19ம்தேதி) மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.