மன்னிஸ்வரர் கோவிலில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை விழா
ADDED :8 hours ago
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நாயனார் திரு உருவ சிலைக்கு முன்பாக பெரிய புராண புத்தகம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை, நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் கோச் செங்கட் சோழ நாயனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அவரை வணங்கினர். நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.