இளையனார்வேலுார் முருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
வாலாஜாபாத்; இளையனார்வேலுார், முருகன் கோவில் லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது.
வாலாஜாபாத் வட்டம், இளையனார்வேலுாரில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், முருகன் கோவில் உள்ளது. முருக பெருமான் தன் வேல் கொண்டு அரக்கர்களை வதம் செய்ததாக வரலாற்று சிறப்புமிக்க தலமாக இது விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், லட்சார்ச்சனை பெருவிழா ஆறு நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டிற்கான லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாரதணயும், சண்முக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீராதணை நடந்தது. விழாவின் 2ம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் லட்சார்ச்சனை விழா நடைபெறுவதாகவும், வரும் 22ல் இந்த விழா நிறைவு பெறுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.