தர்மம் தலைகாக்கும்
சொல்கிறார் வாரியார்
* நீ செய்த தர்மம் உன்னை காக்கும்.
* நல்ல மனமே கடவுள் வாழும் இடமாகும்.
* கடவுளை அன்பினால் வணங்கு.
* மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்.
* எப்போதும் கடவுளை நினை.
* மானம் காக்க ஆடையும், மனதை காக்க வழிபாடும் அவசியம்.
* உங்களின் செயல் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன்தர வேண்டும்.
* பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை.
* பெரியவர்களை அலட்சியப்படுத்தாதே.
* இப்பிறவியில் செய்யும் நன்மையை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.
* நியாயமற்ற வழியில் பணத்தை சேர்க்காதே.
* அறிவை மேம்படுத்தும் நல்ல புத்தகங்களை படி.
* அனுபவத்தால் கிடைக்கும் அறிவே மேலானது.
* பதறாமல் செயல்களை செய்.
* நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றும் நேரத்திற்குள் மறைந்து விடும்.
* யோசித்து செயல்படு.
* அன்பு, அறிவை செயலால் மட்டுமே உணரமுடியும்.
* உறவினரையும் நண்பர்களையும் அளக்கும் அளவுகோல் துன்பம்.
* எல்லாம் தெரிந்தவரும் இல்லை. எதுவுமே தெரியாதவரும் இல்லை.