உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது . கோவில் உதவி ஆணையர் கருணாகரன், விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு பூஜாரிகள், முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. ரொக்கம் ரூ 33,49,619, தங்கம் 185 கிராம், வெள்ளி 285, ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர்கள், மகளிர் சுய உதவிக்குழு வினர்கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !