உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்

தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் , இன்று  20.10.2021,ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கரலிங்கம் சுவாமிக்கும்,  நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, காய்கறி, பழங்கள் மற்றும் அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.  பக்தர்கள் சிவ புராணம், கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம்,  சுண்டல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் ,  சங்கர  நாராயணர் கோயில் கல்வி  அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வம், அங்கப்பன், பன்னீர்செல்வம், மயில்வாகனன், சுந்தரராஜன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !