திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :1 days ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருக்கல்யாணமும். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 10:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.