உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று குருப்பெயர்ச்சி : மாலை 6:21 மணிக்கு பெயர்ச்சியாகிறார் குரு!

இன்று குருப்பெயர்ச்சி : மாலை 6:21 மணிக்கு பெயர்ச்சியாகிறார் குரு!

நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் மகர ராசியில் இருந்து இன்று மாலை 6:21 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2022 ஏப்.14 வரை இங்கு சஞ்சரிப்பார்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடித்திட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி அருகே உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர்  காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் அருகே தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடக்கும்.


இந்த பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகர ராசியினருக்கு நற்பலனும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீன ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!  

தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவராக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். 


இதை பக்தியுடன் 12 முறை படித்தால் குருபகவான் அருளால் வாழ்வில் குறையனைத்தும் தீரும். கோடிநன்மை சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !