உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டில் சிறந்தது எது... விளக்குகிறார் சாய்பாபா

வழிபாட்டில் சிறந்தது எது... விளக்குகிறார் சாய்பாபா


* கடவுளின் திருநாமத்தை சொல்வதே வழிபாட்டில் சிறந்தது.
* ஒருநிமிடத்தை கூட வீணாக்காதே.  
* பொறுமையாக இருப்பதே சிறந்த தவமாகும்.
* எதிலும் திருப்தியாக செயல்படுவதே உண்மையான மகிழ்ச்சி.
* உயிர்களிடம் கருணை காட்டுவதே சிறந்த புண்ணியம்.
* ஆன்மிக சிந்தனை குறைந்து வருவது தான் பிரச்னைகளுக்கு காரணம்.
* வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்.  
* உன் கடமையை ஒழுங்காக செய்.       
* உலகில் காரணமின்றி எதுவும் படைக்கப்படவில்லை.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம்.
* நல்லவர்களின் பெருமையை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது.
* குளிருக்கு கம்பளியை போர்த்துவதுபோல், துன்பம் அதிகரிக்கும்போது கடவுளை பற்றிக்கொள்.  
* பிறர் நலனில் அக்கறை செலுத்து. அதுவே கடவுளின் அன்பை பெறும் வழி.
* ஆசைகளை சீர்படுத்து. நல்ல பண்புகள் தானாக வளரும்.
* நீ விரும்பியதை வழங்க கடவுள் தயாராக இருக்கிறார்.
* தவறான விஷயங்களில் ஈடுபடாதே.
* நல்லதை செய். உன் வாழ்க்கை மேம்படும்.   
* பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாதே.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !