உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவங்களின் ஆணிவேர்

பாவங்களின் ஆணிவேர்


நாயகம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘நான் குடிப்பழக்கதிற்கு அடிமையாகி விட்டேன். இதற்கு பணம் தேவைப்படுவதால் திருடுகிறேன். இதனால் பொய் சொல்கிறேன். இதில் ஏதாவது ஒரு பழக்கத்தை விட்டுவிடுவோம் என நினைக்கிறேன். இதில் எதை விடலாம்’’ எனக் கேட்டார்.
“பொய்யை விட்டு விடுங்கள்” என்றார்.
இதைக்கேட்டு, ‘மற்றதை விடுவதை விட பொய்யை விடுவது எளியதுதானே’ என மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றார்.  
அன்றிரவே குடிக்கும் எண்ணம் வந்தது. ஆனால் ‘குடித்துவிட்டு பொய்சொல்ல முடியாதே’ என பயந்தார்.
‘தவறு செய்தால்தானே பொய் சொல்ல நேரிடும். இல்லாவிட்டால் உண்மை பேசலாமே’ என எண்ணி துாங்கிவிட்டார்.
பார்த்தீர்களா. பொய்பேசுவதை நிறுத்திவிட்டாலே எல்லா தீயபழக்கங்களும் ஒழிந்துவிடும். பொய்தான் பாவங்கள் அனைத்திற்கும் ஆணிவேராக உள்ளது. எனவே உண்மையை பேசி உங்களை காத்துக்கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !