உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவர் கோவிலில் ஜென்ம அஷ்டமி விழா

பைரவர் கோவிலில் ஜென்ம அஷ்டமி விழா

அன்னூர்: திம்ம நாயக்கன் புதூர், பைரவர் கோவிலில், நாளை, ஜென்ம அஷ்டமி விழா நடக்கிறது. மொண்டிபாளையம் அருகே, திம்மநாயக்கன் புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், நாளை, (27ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, ஜென்ம அஷ்டமி விழா நடக்கிறது. பைரவருக்கு, பால், நெய், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !