மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவர் வழிபாடு
ADDED :1492 days ago
சோழவந்தான்: திருவாலவாயநல்லுரர் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகளை அறங்காவலர் கோபிநாத் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.