வடுகநாத சுவாமி கோவிலில் கால பைரவாஷ்டமி
ADDED :1438 days ago
பல்லடம்: பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவில், கால பைரவாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாதமும் பவுர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள் பைரவருக்கு உகந்ததாகும். அந்நாட்களில், பக்தர்கள் காலபைரவரை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி நாள், கால பைரவாஷ்டமி, ருத்ராஷ்டமி என்று கூறப்படுகிறது. பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் மலையம்பாளையம் பிரிவில் வடுகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு கால பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று, கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள், யாக பூஜைகள், மற்றும் அபிஷேகம் பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.