உடுமலை, பொள்ளாச்சி கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்
ADDED :1452 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 108 வலம்புரி சங்குகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தையொட்டி ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், 1008 சங்காபிஷேகம் நடந்தது.