திருப்பரங்குன்றத்தில் அமாவாசை தீர்த்த உற்ஸவம்
ADDED :1452 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அமாவாசையை முன்னிட்டு சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து அஸ்தரதேவர் சரவண பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டது. பின்பு அஸ்தரதேவர் சரவணப்பொய்கை தண்ணீரில் கொண்டு செல்லப்பட்டு தீர்த்த உற்சவம் நடந்தது. தென்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தது.