கோவில்களில் அமலுக்கு வந்தது கட்டணமில்லா திருமண திட்டம்
சென்னை :அனைத்து கோவில்களிலும், கோவில் திருமண மண்டபங்களிலும்,கட்டணம் இல்லா திருமணதிட்டம் நடைமுறைக்கு வந்தது.மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவர்களுக்கு கோவில்களில் திருமண கட்டணம் வசூலிக்கப்படாது என சட்டசபையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவில்களில் மாற்று திறனாளிகள், கட்டடணமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை, இம்மாதம் 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோவிலில், மாற்றுத்திறனாளி ஒருவரின் திருமணம் நேற்று நடந்தது. இதில், இணை கமிஷனர்சுதர்ஷன், கோவில்துணை கமிஷனர்கவெனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன்வாயிலாக,தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தாமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் நடைமுறைக்குவந்துள்ளது.