கசவனம்பட்டியில் மண்டல பூஜை
ADDED :1504 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மண்டல பூஜை நடந்தது. இக்கோயிலின் கும்பாபிஷேகம், அக்டோபர். 27ல் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மண்டல நிறைவை முன்னிட்டு இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.