ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10ம் நாளான இன்று (13ம் தேதி) நம்பெருமாள் நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. பகல் பத்து10ம் நாள் இன்று (13ம் தேதி) காலை, நம்பெருமாள் நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நாளை ( 14ம் தேதி) அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார்.