ஆண்களுக்கு பெண் வேடம் கோவிலில் வினோத வழிபாடு
ADDED :1384 days ago
கடலுார் : கடலுார் சோலை வாழியம்மன் கோவிலில் ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடந்தது. கடலுார், வெள்ளி மோட்டான் தெருவில் சோலை வாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண் வாரிசு வேண்டும் என வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு ஆண்டு தோறும் நடக்கிறது. அதன்படி, ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு நேற்று நடந்தது. பெண் வேடமிட்ட ஆண்கள் கோவிலை வலம் வந்தனர்.தொடர்ந்து, கோவிலில் தீபாராதனை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.