மந்தை கருப்புசாமி கோயிலில் காலபைரவர் வழிபாடு
ADDED :1383 days ago
வாடிப்பட்டி: சோழவந்தான் திருவாலவாயநல்லுரர் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்தனர். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் அறங்காவலர் கோபிநாத் தலைமையில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.