அவள் சூடிய இரட்டைமாலை
ADDED :1459 days ago
ஆண்டாள் வெறும் பூ மாலையை மட்டும் சூடி, பெருமாளுக்கு அனுப்பினாளா என்றால் இல்லை. அவள் பாமாலையும் தொடுத்தவள். பாமாலையை அவன் மனதில் நிற்கும்படியும், பூமாலையை திருவடியிலும் சமர்ப்பித்தாள். சின்ன வயதிலேயே பெரும் பக்தி அவளிடம் இருந்தது. இதைத் தான் வரவர முனிகள் பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை என்று புகழ்கிறார். பிஞ்சில் பழுத்தால் உவர்க்கும் என்பர். ஆனால், இவளோ பக்தியில் பழுத்ததால், இவளது பாடல்தேனாய் இனிக்கின்றது.