ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பேசும் கன்னிமார் கோயிலில் கூட்டு வழிபாடு
ADDED :1445 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே காஞ்சரம்பேட்டை பாறைபட்டி பேசும் கன்னிமார் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏழு கன்னிமார்களுக்கும் செவ்வந்தி உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். உலக நன்மைக்காகவும், ஒமைக்ரான் பரவலைத் தடுக்க கூட்டு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.