உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில்,  உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது.  சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான  மார்கழி மாதத்தில், உத்திராயண  புண்ணியகால பிரமோற்சவம்  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.


இதை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து  விநாயகர்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்க கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன் உள்ள, 63 அடி உயர தங்க கொடிமரத்தில், தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. குறைவான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும். தினமும் காலை, இரவு சுவாமி  மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  வரும், 14ல், தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !