ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 25ம் நாள் விழா
ADDED :1378 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தி ஐந்தாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளர
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
என்ற திருப்பாவை இருபத்தி ஐந்தாம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை, "ஒளித்து வளர்ந்த ஒருவன்" திருக்கோலத்தில் அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.