ஸ்ரீரங்கம் மார்கழி பாவை நோன்பு: 28ம் நாள் விழா
ADDED :1375 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தியெட்டாம் நாளான இன்று (12ம் தேதி) திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
கறவைகள் பின்சென்ற கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து * உன்றன்னைப்
பிறவிபெறுந்தனை புண்ணியம்யாமுடையோம்
குறைவென்றுமில்லாத கோவிந்தா ! உன்தன்னோடு ..
என்ற திருப்பாவை இருபத்தியெட்டாம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை, " வாசுதேவனுடன் வனபோஜனம் திருக்கோலத்தில் " சிறப்பு அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.