உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச விழா: பழனிக்கு புறப்பட்ட பாரம்பரிய நகரத்தார் காவடிகள்

தைப்பூச விழா: பழனிக்கு புறப்பட்ட பாரம்பரிய நகரத்தார் காவடிகள்

காரைக்குடி: தைப்பூச திருவிழாவையொட்டி, குன்றக்குடியிலிருந்து பாரம்பரிய நகரத்தார் காவடிகள், பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டது.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா வருகின்ற 18ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக நேற்று இரவு குன்றக்குடியை வந்தடைந்தனர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து, இன்று காலை 8 மணிக்கு மாட்டு வண்டியில் ரத்தினவேல் முன்னே செல்ல, 160 நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக சென்றனர். கொரோனா பரவல் காரணமாக வழக்கத்தை விட குறைவான காவடிகளே சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !