உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கு சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்

பொங்கு சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள பொங்கு சனி பகவானுக்கு, சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.

பாகூரில் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வடக்கு திசையில், மேற்கு பார்த்து, இடது கையில் கமண்டலம், தோலில் ஏர் கலப்பை, காக்கை கொடியுடன் பொங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள்பாலித்து வரு கிறார்.

இங்கு, சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி, உள்ளிட்டவற்றால் பொங்கு சனி பகாவானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சிவக்குமார், கோவில் சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !