உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் இன்று பொய்கால் குதிரை நிகழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் இன்று பொய்கால் குதிரை நிகழ்ச்சி!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்து வரும் 20வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், இன்று "ஜெயராமன் குழுவினரின் பொய்கால் குதிரை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு, விவசாயிகளுக்கான கருத்தரங்கு. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர்.
* மாலை 5 மணிக்கு, குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளி கல்வி துறை.
* மாலை 6 மணிக்கு, "வேம்பு விநாயகர் குழுவினரின் நாடகம். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர்.
* மாலை 6.30 மணிக்கு, "பரிமளாதேவி குழுவினரின் ரிதம்ஸ். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர்.
* இரவு 7 மணிக்கு, "ஜெயராமன் குழுவினரின் பொய்கால் குதிரை நிகழ்ச்சி. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர்.
* இரவு 7.30 மணிக்கு, "நாதன் டேன்சர் அகாடமி நடன நிகழ்ச்சி. ஏற்பாடு: கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர்.
* இரவு 8.30 மணிக்கு, ஸ்வாதி ஸ்ருதி குழுவினரின் இன்னிசை கச்சேரி. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !