வியாபாரிகளே... கொஞ்சம் கேளுங்க
ADDED :1615 days ago
இன்று பலரும் வியாபாரத்தில் நேர்மையை பின்பற்றுவதில்லை. பணத்திற்கு தகுந்த பொருளை தராமல் மக்களை ஏமாற்றுகின்றனர். சிலர் அதிக விலை வைத்து விற்கின்றனர். இவர்களுக்காகவே நாயகம் ஒன்றை சொல்கிறார்.
‘வியாபாரத்தில் பொய் சத்தியம் செய்யாதீர்கள். பொருட்களை கொள்முதல் செய்வதிலும், விற்பதிலும் மென்மையை கையாளுங்கள். இதில் வரும் லாபமே நிலையானது. இப்படிப்பட்டவர்கள் மறுமை நாளில் நல்லவர்களுடன் இருப்பர்’