இரவும் பகலும்!
ADDED :4881 days ago
திருக்கோயில் தீர்த்தங்களில் பகலில் மட்டுமே நீராட வேண்டும் என்பது நியதி. இதற்கு விதிவிலக்காக, ஒப்பிலியப்பன் ஆலயத் திருக்குளத்தில் பகல், இரவு என எப்போது வேண்டுமானாலும் நீராடலாம். இதனால் இத் தீர்த்தத்தினை அகோ ராத்ர புஷ்கரணி என்றழைக்கின்றனர். தமிழில் பகலிராப் பொய்கை.