திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. உற்சவர் சன்னதியில் அஸ்தரதேவர் எழுந்தருளினார். பூஜைகள் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது.
வழக்கமாக தீர்த்த உற்ஸவத்தின் போது அஸ்தரதேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டு அங்கு எழுந்தருளியுள்ள ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் தீர்த்த உற்ஸவம் நடக்கும். சுவாமி புறப்பாட்டின்போது வழியில் ஏதேனும் துக்க நிகழ்வுகள் நடந்தால் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்படும். சுவாமி செல்லும் வழியில் துக்க நிகழ்வு நடந்ததால் தீர்த்த உற்ஸவத்திற்கு அஸ்திரதேவர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் நடந்தது. மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது. பால திரிபுர சுந்தரி அம்மன் பஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.