உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் பத்து நாள் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் 2014–ம் ஆண்டு தினமலர் சார்பில் ராஜகோபுரம் கட்டி கொடுக்கப்பட்டது. இங்கு நடைபெறும் மாசி திருவிழா நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். எட்டாம் நாள் விழா வரை தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15–ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சப்தாவரணமும் நடைபெறுகிறது. 16–ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !