உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி மகோற்சவம்

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி மகோற்சவம்

விழுப்புரம், ; விழுப்புரம் ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ரதசப்தமி மகோற்சவ விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை, 9:00 மணிக்கு அனுமந்த வாகனம், 10:30 மணிக்கு சேஷ வாகனம், மதியம் 12:30 மணிக்கு கருட வாகனம், மாலை 4:00 மணிக்கு இந்திர விமானம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு கற்பக விருட்சம், இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !