திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் தெப்பத்தில் உலா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசிமக உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தீர்த்த குளத்தில் தெப்பல் உலாவந்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சக்கரத்தாழ்வார்க்கு கோவில் வளாகத்தில் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்தமண்டபத்தின் வழியே எழுந்தருளி, தீர்த்த குளத்தில் தெப்பத்தில் வானவேடிக்கை முழங்க உலாவந்தார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.