இம்மையில் நன்மை தருவார் கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1361 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1431 பசலி மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி வெவ்வேறு வாகனத்தில் அருள்பாலித்து வருகிறார். விழாவில் 10ம் நாளான நேற்று (17 ம் தேதி) இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இறைவன் இறைவியை தரிசனம் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.