வீரமாத்தியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா
ADDED :5091 days ago
திருப்பூர்: பெரிச்சிபாளையம் ஸ்ரீவீரமாத்தியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது.சுவாமிகளுக்கு கோவில் மணவறையில் திருக்கல்யாணம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மை அழைத்தல், குதிரை வாகன ஊர்வல காட்சிகள் நடந்தன.மேள தாளம் இசை முழங்க நடந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இவ்விழா நேற்று நிறைவடைந்தது.