உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்று விழா

நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்று விழா

சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா நடந்தது.


கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கூடைலையாற்றுார் கிராமத்தில் சுந்தரருக்கு காட்சி கொடுத்த ஞானசக்தி, பராசக்தி சமேத நர்த்தனவல்லபேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு, 14 நாட்கள் நடக்கும் மாசி மகம் மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


முதல் நாளான நேற்று நர்த்தனவல்லபேஸ்வரர், ஞானசக்தி, பராசக்தி, பரிவார தெய்வங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், சனி பகான், நடராஜருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9.00 மணிக்கு, கொடி மரத்தின் முன்பாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.


ஹோமங்களில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களிலிருந்து புனித நீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.00 மணிக்கு, சிவன்பார்வதி ரிஷப வாகனத்தில் உள்ள கொடி ஏற்றி மஞ்சள் காப்பு, தர்பை புல் சாற்றப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை அருணாச்சல செட்டியார் அறக்கட்டளை மற்றும் கூடலையாற்று கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !