ஆலகாலம் என்பதன் பொருள்
ADDED :1351 days ago
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இருவித விஷங்களும் ஒன்று சேர்ந்தன. ‘ஆலம்’ என்பதற்கு விஷம் என பொருள். இரு விஷங்கள் இணைந்தால் அதனை ‘ஆலாலம்’ எனக் குறிப்பிட்டனர். இது பேச்சு வழக்கில் ‘ஆலகாலம்’ என திரிந்து விட்டது.