வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
ADDED :1362 days ago
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனியில் உள்ள சக்தி வீரமா காளியம்மன் கோயிலின் 17வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான அரிவாள் ஏணியில் சாமியார் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பர்மாகாலனி வீரமாகாளியம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரி எடுத்துச் சென்றனர். வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே உள்ள குளத்தில் முளைப்பாரிகளை கரைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் செய்திருந்தனர்.