நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :1348 days ago
நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் மாசி மாத பிரதோஷ விழா நடந்தது. இதனையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதர்க்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம் ,பன்னீர் ,இளநீர், மஞ்சள் ,சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்தி சிலைக்கு தீபாராதனைகள் நடந்தது. இதில் நத்தம், வேலம்பட்டி, வத்திப்பட்டி, சிறுகுடி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.