பஞ்சம் போக்கும் பைரவர்!
ADDED :1337 days ago
பைரவரின் அரிய சிலை திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை என்னும் ஊரில் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ளது. ஐந்து முகங்களுடன் விளங்கும் இவர் பத்துக்கரங்களில் சூலம், சக்கரம், மழு,கதை, கத்தி, கபாலம், டமருகம், சங்கு, பாசம், கேடயம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். அவருக்குப் பின்னால் யாளி வாகனம் உள்ளது. நீண்ட கபாலமாலை அணிந்துள்ள இவரை தரிசித்தால் பஞ்சம், ஏழ்மை நிலை நீங்கி வளம் பெறலாமாம்.