திருச்சுழியில் சகாய வள்ளி சமேத திருமேனி நாதர் திருக்கல்யாணம்
ADDED :1297 days ago
திருச்சுழி: திருச்சுழியில் பழமை வாய்ந்த சகாய வள்ளி சமேத திருமேனி நாதர் கோயிலில் மாசி பிரமோற்சவ விழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்க திருக்கல்யாணம் நடந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும், தம்பதி சமேதராக , பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். இன்று திருத் தேர் விழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.