உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்

பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி மாத அம்மாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி மாத அம்மாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. இதற்காக நேற்று காலை 11. 30 மணியளவில் யாக குண்டத்தில் மிளகாய்  வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் நெய், பழங்கள், பால், தயிர் ஆகியவை யாக குண்டத்தில் போடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை எழுதிய  வெற்றிலைகளையும், புடவைகளும் யாககுண்டத்தில் சாற்றட்டப்பட்டன. அமாவாசையையொட்டி பிரத்தியங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !