சந்தான கோபாலகிருஷ்ணன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :1444 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் பாமா ருக்மணி சமேத சந்தான கோபாலகிருஷ்ணன் கோயிலில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இரவு கோயில் சன்னதியில் உலக நிலை, நட்சத்திரம், யோகம், விரைம் குறித்து வரதராஜ் பண்டிட் பஞ்சாங்கம் வாசித்தார்.