உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம், : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மலை வலம் வரும் நிகழ்வு நடந்தது.ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !