உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையாண்டி கோயில் திருவிழா

மலையாண்டி கோயில் திருவிழா

கொட்டாம்பட்டி: குன்னங்குடிபட்டி மலையாண்டி கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏப். 1 முதல் காப்பு கட்டி விரதமிருந்தனர். எட்டாம் நாளான நேற்று பக்தர்கள் பூசனார் கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு செய்யப்பட்ட முருகன் சிலையை நிர்வாகிகள் தேரில் வைத்து கோயிலை சுற்றி வர தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னங்குடிபட்டி, சாவரப்பட்டி, அரையினிப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !