குருப்பெயர்ச்சி: குறையனைத்தும் தீரும்! கோடி நன்மை சேரும்!
நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் கும்ப ராசியில் இருந்து நாளை(ஏப்.14) அதிகாலை 4:16 மணிக்கு மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2023 ஏப்.30 வரை இங்கு சஞ்சரிப்பார்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை, மதுரை மாவட்டம் குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி மாவட்டம் உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர், காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் அருகே தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம் நடக்கும்.
இந்த பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்ப ராசியினர் நன்மையடைவர். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீன ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!
தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவராக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். இதை தினமும் 12 முறை படியுங்கள்.