பெரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :1306 days ago
அன்னூர்: அன்னூர் பெரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. அன்னூரில் பழமையான பெரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பக்தர்கள் கனி வகைகளை படைத்தனர். அபிஷேக பூஜை முடிந்து, அம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவிலிலும் அம்மனுக்கு கனிவகைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அங்காளம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.