விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அமாவாசை அபிஷேகம்
ADDED :1446 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அபிஷேகம், பூஜை சிறப்பாக நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு இன்று (30ம்தேதி) கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.