உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடந்த ஏப்ரல் 19 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வீதி உலா நடந்தது. 12ம் திருவிழா நாளான நேற்று மதியம் 3:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முன்னதாக பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சந்தனமாரியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக எழுந்தருளிய சந்தனமாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !